Tuesday, November 1, 2011

மூளை இருக்கா தலைவா?


சாவதானிகள் எனப்படுவோர் ஒரே நேரத்தில் 10 வேலைகள் செய்யும் திறமை பெற்றவர்கள் எனக் கூறுவார்கள்.உண்மையிலேயே அது சாத்தியமா?

கம்ப்யூட்டர் மொழியில் இதனை Multi Tasking என்று சொல்லப்படுகிறது.




அதாவது ஒரே நேரத்தில் பல செயல்கள் கம்ப்யூட்டரில் நடைபெறுவதை Multi Tasking எனக்கூறுகிறோம்.

இந்த Multi Tasking வசதி ஆரம்பகால Operting Systems - களில் கிடையாது. உதாரணமாக DOS-(Disk Operating System) எனும் Operting System ல் ஒரு நேரத்தில் ஒரு செயல் மட்டுமே நடைபெறும். அதாவது ஒரு Document டைப் செய்துகொணடிருக்கும்போது வேறு எந்த செயலும் நடைபெற முடியாது. இது போன்ற Operting System களை Single Tasking Operting System என்கிறோம்.

தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து Operting System (Windows XP, Linux etc..) - களிலும் Multi Tasking வசதி உள்ளது;. இவ்வகை Operting System களை Multi Tasking Operting System என்கிறோம்.

அதாவது Media Player ல் ஒரு பாடலை ஒலிக்கவிட்டுக்கொண்டே word ல் எதாவது டைப் செய்துகொண்டிருக்கலாம். அதே நேரத்தில் Virus களை தேடிக்கண்டுபிடித்து அழிக்கும்படி Antivirus Software ஐ முடுக்கி விடலாம். பின்னனியில் ஏதாவது ஒரு Document அச்சிடுவதற்காக Printer க்கு அனுப்பப்படலாம்.


இச்செயல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில்(Concurrently) நடைபெறுவதுபோலத் தோன்றினாலும் அவ்வாறு ஒரே நேரத்தில் நடைபெறுவதில்லை என்பதே உண்மை. அதாவது அனைத்து செயல்களும் சிறிய கால இடைவெளிகளில் மாறி மாறி சிறிது சிறிதாக நிறைவேற்றப்படுகிறது.இச்செயலை Time Slicing என்கிறோம்.

உதாரணமாக ஓட்டலில் ஒரே சர்வர் அனைத்து டேபிளிலும் அமர்ந்திருப்பவர்களுக்கும் மாறி மாறி தேவையானவற்றை வழங்கி அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்கிறார்.அதே நேரத்தில் ஒரு டேபிளுக்கு சேவை செய்யும்போது மற்ற டேபிளில் அமர்ந்திருப்பவர்கள் சிறிது நேரம் காந்திருக்க நேரிடுகிறது.

கம்ப்யூட்டரிலும் அதே போன்ற செயலே நடைபெறுகிது. ஆனால் கம்ப்யூட்டர் வேகமாக இயங்குவதால் அனைத்து செயல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவது போலத் தோற்றமளிக்கிறது.இவை Single Core Processor பொருத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் நடைபெறும் செயல்களாகும்.

ஆனால் தற்போது புதிதாக வந்திருக்கும் Dual Core processor களில் உண்மையிலேயே இரண்டு செயல்பாடுகள் ஒரேநேரத்தில் செயல்படுத்தப்படுகின்றன. ஏனெனில் Dual Core processor கள் ஒரே Chip க்குள் இரண்டு processor களைக் கொண்டுள்ளன. அதனால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட செயல்களை செய்யும் திறனை கம்ப்யூட்டர் பெறுகிறது.Intel தயாரித்துள்ள புதியவகை processor களான Core 2 Duo வகைகள் ஒரே Chip க்குள் இரண்டு processor களைக் கொண்டிருந்தாலும் Dual Core processor களை விட வேகம் மிகுந்த மேம்படுத்தப்பட்டprocessor களாகும்.
Quad Core வகை processor கள் Chip க்குள் நான்கு processor களைக் கொண்டுள்ளன. எனவே இவ்வகை processor கள் Single Core Processor களை விட நான்கு மடங்கு வேகமாகச் செயல்படும்.
மனித மூளையானது Single Core Processor போன்று செயல்படுகின்றன. அதாவது ஒரு மனிதனால் ஒரு நேரத்தில ஒரு செயலை மட்டுமே சிறப்பாக செய்ய முடியும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 1.5 கிலோ கிராம் எடையும், சுமார் 149000 கிலோமீட்டர் முதல் 176000 கிலோ மீட்டர் நீளம் வரையிலான நரம்பிழைகளைக்கொண்ட மனித மூளையின் பெருமூளை(cerebral) மற்றும் சிறுமூளை(cerebellum) ஆகிய அத்தனை சமாச்சாரங்களும் வெறும் 12 Watts சக்தியில் இயங்குவதால் ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாக செய்யமுடியாது என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

உதாரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் வாகனம் ஓட்டும் நபர் ஒரே நேரத்தில் வலப்புறமாக தன்னைக் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையையும், இடப்புறமாக தான் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையையும் மிகச்சரியாக கூறமுடியாது. ஏனெனில் அவர் தனது கவனம் முழுவதையும் தனது வாகனத்தைச் செலுத்துவதிலேயே செலவழிக்கிறார்.

மொபைல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டும்போது நமக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. அதனால் அந்நேரத்தில் கண்ணில் எதிர்ப்படும் வாகனங்கள் பற்றிய அறிவோ காதை வந்தடையும் வாகனங்களின் ஒலி பற்றிய விழிப்புணர்வோ மூளையைச் சென்றடைவதில்லை. அதனாலேயே பல விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே..

நமது மூளையானது Multi Tasking திறமை கொண்டது அல்ல என்பதை உணர்ந்து...




வாழ்க்கையில்..
சாலையில் பயணிக்கையில்..
உன் கையில் செல்...
தவிர்த்து விட்டுச் செல்!

......

Thursday, October 20, 2011

பலன் தரும் பாட்டி வைத்தியம் -2






50 கிராம் வெள்ளைப்பூண்டு மற்றும் இஞ்சி 50 கிராம் எடுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் பெரிய வெங்காயம் 25 கிராம், சிறிய வெங்காயம் 10 கிராம் சேர்த்து மிக்சியில் மாவுபோல அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து வாயில் போட்டு சிறிது நேரம் குதப்பிவிட்டு அப்படியே முழுங்கிவிடவும்.அத்துடன் சிறிது வேப்பெண்ணையை உள்ளங்கையில் ஊற்றி தலைமுடி மற்றும் கை,கால்களில் தடவிக்கொண்டு சென்றால்....



எவ்வளவு கூட்டத்திலும் நீங்கள் நசுங்காமல் தாராளமாக பயணம் செய்யலாம்.



.....

பலன் தரும் பாட்டி வைத்தியம் - 1



100 மில்லி லிட்டர் வேப்பெண்ணெயை வாணலியில் இட்டு சூடுபடுத்தி,கொதிநிலைக்கு வந்தவுடன் அத்துடன் 50 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் சூடுபடுத்தி அத்துடன் சிறிது பெருங்காயப் பவுடர் லேசாக தூவி வாணலியை இறக்கி வைத்து ஆற வைக்கவும்.இரவு உறங்குவதற்கு முன் வாணலியிலிருந்து இந்த கலவையை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டால்..........


கொசு கடிக்காதுங்க!

.....

Sunday, June 5, 2011

தே.மு.தே.பி








பின் குறிப்பு :

தே.மு -தேர்தலுக்கு முன்.

தே.பி - தேர்தலுக்குப் பின்.



.....

Wednesday, May 18, 2011

2G சுட்டதடா!





2G சுட்டதடா கை விட்டதடா!
2G சுட்டதடா கை விட்டதடா!

ஆய்வு கெட்டதடா ஓய்வு கிட்டுதடா!
ஆய்வு கெட்டதடா ஓய்வு கிட்டுதடா!

தேர்தல் முடிவு வந்த பின்னால்
திரு திருன்னு முழிக்குதடா!

(2G சுட்டதடா...)

ஆரவாரப்பேய்கள் 58 ம் ஓடி விட்டதடா!
5 மட்டும் மீண்டு வந்து மிரண்டு நிக்குதடா!

மாங்கனிகள் 27 ம் மட்கிப் போனதடா
3 மட்டும் கனிந்து வந்து முக்கி நிக்குதடா!

சிறுத்தை 10 ம் சீற்றத்துடன் கலைந்து போனதடா!
தேர்தல் காட்டில் அத்தனையும் தொலைந்து போனதடா!

கொள்ளுப் பேரன் பேத்தியெல்லாம் கோபம் கொள்ளுதடா!
பதவியின்றி அத்தனையும் பதறி நிக்குதடா!


மஞ்சள் துண்டு வெளுத்துப் போயி வெள்ளை வந்ததடா!
காங்கிரசால் கனிமொழிக்கு தொல்லை வந்ததடா!

போயஸ் கோட்டம் கனவில் வந்தால் பொறி கலங்குதடா!
விஜயகாந்து தம்பியை நினைச்சு விழி கலங்குதடா!

கடிதம் எழுதிய எந்தன் கைகள் ஓய்வு கொண்டதடா!
மனம் 2G 2G 2G என்று கடுப்பு கொள்ளுதடா!


.....

Friday, April 29, 2011

தத்து(பித்து)வம்!





அருகில் தூங்குபவர் விடும் குறட்டையிலிருந்து தப்பிக்க உங்கள் காதுகளைப் பொத்திக்கொள்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் குறட்டை விடுபவர் வாயையும் மூக்கையும் நீங்கள் பொத்தினால் கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவரக்கூட உங்களுக்கு உரிமையில்லை.

Tuesday, April 5, 2011

போடுங்கய்யா ஓட்டு!





தேர்தலைத் திருவிழா ன்னு சொல்லுவாங்க.

ஆனா அந்த திருவிழாவில் வெட்டப்படும் பலியாடுகள் யாருன்னா நம்ம அப்பாவி வாக்காளன்தாங்க.

தேர்தலிலே நிற்கிற வேட்பாளர் கஞ்சக் கருமிப் பயலா இருந்தாலும் தேர்தல் நேரத்தில மட்டும் கொடை வள்ளலா மாறிடுவாரு.

நேத்து வரைக்கும் நடுரோட்டுல வாந்திபேதி எடுத்து வயித்தால போயி மயங்கி கிடந்த வக்கத்துப் போன வாக்காளனை கண்டுகொள்ளாமல் போன நம்ம கட்சி வேட்பாளரு இப்ப வேலை வெட்டிக்கு போகாம வீட்டுக்குள்ள ஒரு ரூவா அரிசியை பொங்கி தின்னுபுட்டு ஒய்யாரமா குந்திகிடக்கிற அவனை போயி சுகம் விசாரிச்சு சுக்குகாபி போட்டு கொடுப்பாரு.

வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் ஒரு மாத காலத்துக்கு ரெண்டு கைகளையும் பெவிகால் போட்டு ஒட்டுனது மாதிரி கும்பிட்டுகிட்டே திரிவாரு. குடும்பத்தோட தூங்கும்போது கூட கும்பிட்டுகிட்டே குறட்டைவிடுவாரு.

தேர்தல் நேரத்தில கட்சிக்காரனுங்க கொடுக்கும் வாக்குறுதிகளைக் கேட்டாலே தலையைச்சுத்துது.

"ஓசி மக்கள் கழகம்" ங்கற கட்சிகாரனுங்க தேர்தல் வாக்குறுதி அச்சடிச்சு வர்றவன் போறவனுக்கெல்லாம் வலுக்கட்டாயமா கொடுத்துகிட்டு இருந்தானுங்க. படிச்சுப் பார்த்தா இப்புடி இருந்துச்சி......


'நாங்கள் ஆடசிக்கு வந்தால் அரசாங்க செலவில் எல்லா ஊர்களிலும் அன்ன சத்திரம் கட்டி அனைத்து குடும்பங்களையும் தங்கவைத்து மூன்று வேளையும் ஓசியில் உணவு வழங்குவோம்.

காலை எழுந்தவுடன் கடுங்காபியுடன் காரமும் வழங்கப்படும்.

காலை சிற்றுண்டியாக குண்டான் நிறைய குழம்பு சோறும் குஷ்பு இட்லியும் வழங்கப்படும்.

மதிய உணவாக மாங்காய் வடவத்துடன் மணமணக்கும் சாம்பார் சாதமும்,

மாலையில் மக்காச்சோளமும் அவித்துக்கொடுக்கப்படும்.

அத்துடன் பிரமாதமான பில்டர் காபி வரிசையில் நிற்க வைத்து வாயில் ஊற்றப்படும்.

இரவு உணவாக இருட்டுக்கடை அல்வாவும் இடியாப்பமும் வழங்கப்படும்.

ஓசியில் தின்னு விட்டு ஒய்யாரமாக ஓய்வெடுப்பதற்கு ஓலைப்பாய் பின்னித்தரப்படும்.

டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு வாந்தியெடுத்து, வயலில் உருண்டு கிடப்பவர்களுக்கு 'சிறந்த குடிமகன்' விருதாக கோப்பையுடன் கோழி சப்பையும் குவார்ட்டரும் வழங்கப்படும்.

போதையில் பொண்டாட்டியை புரட்டியெடுப்பவர்களுக்கு 'உத்தமபுருசன்' பட்டத்துடன் ஊறுகாயும் வழங்கப்படும்.

வருடத்தில் அதிகமாக வாங்கி குடித்து, அரசுக்கு வருமானத்தை பெருக்கித் தரும் பொறுக்கிப்பயல்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் பட்டம் வழங்கப்படும்.


குடிபழக்கம் இல்லாத தேசதுரோகிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

திருடர்கள் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 24 மணி நேரத்திற்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் திருடர்களுக்கு ஆண்டொன்றுக்கு 420 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

பிச்சைக்காரர்களுக்கு அரசு மானியத்துடன் தங்கத்தில் திருவோடு வழங்கப்படும்.

வேலையற்ற இளைஞர்கள் வெட்டிப்பேச்சு பேசி காலைத்தைப் போக்க குட்டிச்சுவர்கள் கட்டிக்கொடுக்கப்படும்.

கச்சத்தீவை கயிறுகட்டி இழுத்துவந்து இந்தியாவோடு இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.'

இப்படியெல்லாம் வாகனத்தில் நின்றபடி வாக்குறுதி கொடுத்து வாக்கு கேட்கும் வேட்பாளரை நம்ம மக்கள் வாயைப்பொளந்து கேட்பாங்க.

அதே ஆச்சரியத்தோட போயி பட்டனைக் குத்தி அவனுக்கு பதவியை கொடுத்துபுட்டு பாழாய்ப்போயிடுவாங்க.

நேத்துவரைக்கும் மணல்கொள்ளையடிச்சு,சாராயம் வித்து போலீஸ்காரன் கிட்ட செறுப்படி வாங்கின,மூணாம் கிளாஸ் பெயிலான நம்ம வேட்பாளர் தேர்தல் நேரத்திலே கஞ்சி போட்ட வெள்ளைச்சட்டையும் வேட்டியும் கட்டிகிட்டு மைக்கைப் பிடிச்சு பொளந்து கட்டுவாரு.

'நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.... அதாவது இதன் மூலம் உங்களுக்கெல்லாம் ஒன்று கூறிக்கொள்ள நான் விரும்புவது என்னவென்றால்... இதைப்பற்றி திருவள்ளுவர் என்ன சொன்னார் என்றால்.. அதாவது இதை நான் ஏன் உங்களுக்கெல்லாம் கூறுகிறேன் என்றால்... ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ரெண்டிலே... சுமார் ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்தது என்றால்.... இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு நான் ஒன்றும் சொல்லத்தேவையில்லை. ஏனென்றால் நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ளும் அளவிற்கு நீங்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை என்பதாலும் அனைத்தும் உங்களுக்கு தெரியும் என்பதாலும் மேற்கொண்டு அதைப்பற்றி உங்களுக்கு நான் கூறவேண்டிய தேவையில்லை என்பதால் இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.'

கடைசி வரைக்கும் என்னத்தை சொல்ல வந்தார்னு அவருக்கும் தெரியாது. கேட்டவனுக்கும் புரியாது.

தேர்தல் நாள் அன்னைக்கு கட்சிக்காரனுங்க ரொம்ப பாசத்தைப் பொழிவானுங்க.

குத்தவெச்சி உட்கார்ந்து வெத்தலையை குதப்பிகிட்டு கிட்டு இருக்கிற கிழவிகளை குண்டுகட்டா தூக்கிகிட்டு போற நம்ம கட்சிக்கார பயலுங்க, எலக்சன் பூத்துக்குள்ள கொண்டுபோயி கிழவி கையைப்பிடிச்சி 'இந்த பட்டன்ல குத்து ஆத்தா' ன்னு சொல்லி இவனுங்களே பட்டனை குத்திபுட்டு கிழவியை வெளியில தூக்கி கடாசிட்டு போயிடுவானுங்க.

சுள்ளுன்னு அடிக்கிற வெயிலிலே வீட்டுக்கு திரும்பி வரும் கிழவிகள் சுருண்டு விழுந்து சுடுகாட்டுக்கு கொண்டுபோற நிலைமைக்கு ஆளாயிடுவாங்க.

தேர்தல் முடிவு அறிவிக்கபட்டதும் வெற்றிபெற்ற கட்சிக்காரனுங்க வெடியை வெடிச்சு எதிர்க்கட்சிக்காரனோட வேதனையைக் கிளப்புவானுங்க.

தோற்றுப்போன கட்சிக்காரனுங்க தோளில் கிடக்கிற துண்டை எடுத்து தலைமேல போட்டுகிட்டு அடையாளம் தெரியாம ஊருக்குள்ள நடமாடுவானுங்க.

தேர்தலிலே தோற்றுப்போன கட்சிக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணின நடிகர்கள் பீதியில் பேதிபோயி நாதியத்துப் போயிடுவானுங்க.

யாரு வெற்றி பெற்றாலும் தோற்றுப் போனாலும் பட்டனைக் குத்தின பாவிமக்கள் தன்னோட பழைய சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட காசில்லாம பஞ்சத்துல அடிபட்ட பரதேசி ஆயிடுவாங்க.


இதன் மூலம் உங்களுக்கெல்லாம் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால்..

தயவுசெய்து தேர்தலிலே ஓட்டுப்போடுங்க...!

'போடுங்கய்யா ஓட்டு! எந்த கண்றாவி சின்னத்தையாவது பார்த்து!'

என்று கூறி இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!



.......

Saturday, March 19, 2011

தேர்தல் (மறை)முகம்-4






வல்லரசு சூழலில்
ஒளிரும்
ஒளிநாடா?


இல்லை..

வானளாவிய ஊழலில்
ஒழியும்
ஒழிநாடா?

என

இழிவாய்
இகழ வைத்தது...

நீரா ராடியாவின்
ஒலிநாடா!


...

தேர்தல் முகம்-3




தேர்தலில்..

வெற்றி பெற்றால்
அரசு செலவில்..
ஆகாய வழியில்..
அலைந்து திரிய..
தமிழ்நாடு!

அவமானமாய்
தோற்றுப்போனால்
அடுத்த தேர்தல்
வரும் வரை
அயர்ந்து தூங்க..
கொடநாடு!

...

தேர்தல் முகம்-2




அரசனும்
ஆண்டியாவான்
விலைஉயர்வு
சூழலிலே!

ஆண்டி மகன்
அரசனான்
இமாலய
ஊழலிலே!


....

தேர்தல் முகம்-1




சூத்திரத்தை...
சாத்திரத்தை
ஆத்திரமாய் எதிர்த்த
ஆவேசப் பகுத்தறிவு..
மஞ்சள் துண்டு
துவைத்துப் போட
கோபாலபுரம் விரைவு!

...